முருகப்பெருமான் அடியார்களே!
புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் பெருமானுடைய ஆலயத்தின் தண்ணீர் பந்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை ( 2019.10.19) காலை ஒன்பது மணியளவில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இவ் திருப்பணியுடன் கூடிய அறப் பணியை புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தை சேர்ந்த திரு முருகேசு முத்தையா ( சுவிஸ் ) குடும்பத்தினர் நிறைவேற்றி தருகின்றனர்.
காலை எட்டு மணிக்கு எம் பெருமானுக்கு விஷேட அபிஷேகம் இடம்பெற்று அதனை த் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதன் பின்னர் இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
நன்றி.