புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி மாணவச்செல்வங்களின் கலைநிகழ்வுகளுடன் தலைமையுரை வரவேற்புரையைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரதமவிருந்தினரின் உரைகள் நடைபெற்றது ஈற்றில் மாணவர் கௌரவிப்பு நடைபெற்று நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
