புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம்
எமது அன்பிற்குரிய பழைய மாணவன் சரவணமுத்து கிருபாமூர்த்தி அவர்கள் வித்தியாலயம் சென்ற பொழுது எங்கள் வித்தியாலய கிணற்றின் நிலையைக் கண்ணுற்ற தாம் அதைப் புனரமைப்புச் செய்து தருவதாக கூறியிருந்தார். அதன்படி ரூபா 130,000.00 செலவில் புதிய கிணறுபோன்று புனரமைப்புச் செய்து நீர்த்தாங்கி, கொள்கலன் முதலானவற்றையும் புதுப்பித்து அன்னைக்கு அழகுசேர்த்துள்ளார்.அவரின் சேவை மனப்பாங்கை வரவேற்பதோடு எங்கள் வித்தியாலய பழைய மாணவ ர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.