எமது பாடசாலை 1910 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 3ம் நாள் அமரர் வைத்தியலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்களினால் மூத்ததம்பியர் வளவில் அரச மரநீழலில் ஓலைக்குடிசையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் அரச நன்கொடை பெறும் பாடசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெற வேண்டுமாயின் நிரந்தரமாக பாடசாலைக்கென சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடத்துடன் பாடசாலை அமைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அந்நிலையில் கனகசபையார் இராமநாதரின் மகன் அப்பச்சியர் ( திருமதி சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்களின் தந்தை) தற்போது எமது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் தமது காணியில் முன்புறமாக மூன்று பரப்புக் காணியை நன்கொடையாக வழங்கினார் .