புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது சைவ கலா மன்றத்தினால் 1935 இல் நிறுவப்பட்டது
ஆரம்பத்தில் இப்பாடசாலையானது 5 மாணவகர்ளுடனும் 2 ஆசிரியர்களுடனும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து 1991ஆம் ஆண்டின் இடப்பெயர்வின்போது 428 மாணவர்களையும் 14 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு கனிஷ்ட மகாவித்தியாலயமாக விளங்கியது.
ஆரம்பத்தில் சைவவித்தியா அபிவிருத்திச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி பின் 1962.04.01ஆம் திகதி கல்வி அமைச்சின் சட்டத்திற்கு உட்பட்டு அரசுடமையாக்கப்பட்டது. அத்தோடு இதனருகே இருந்த புங்குடுதீவு வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலையும் இப்பாடசாலையுடன் 1962.09.1ம் திகதி ஒன்றிணைக்கப்பட்டு இது புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என்ற பெயருடனேயே இயங்கிவந்தது.