இப்பாடசாலை புங்குடுதீவிலுள்ள ஊரைதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊரைதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்யாசாலை என்னும் பெயரில் இப்பாடசாலை சைவ வித்யா விருத்திச் சங்கத்தினால் நிறுவப்பட்டது. 1935 ஆம் ஆண்டு கல்வியதிகரியாக கடமையாற்றிய திரு.ஏ. சரவணமுத்து அவர்கள் புதிய கட்டிடம் ஒன்றை கட்டினால் தான் அரசாங்க உதவியை பெறமுடியும் என்பதனால் திரு.சி.நல்லதம்பி ஆசிரியர் தனது செலவில் பத்துப் பரப்புக் காணியை திரு. வை.சின்னையா என்பவரிடம் வாங்கி சைவ வித்யா விருத்திச் சங்கத்திற்கு கையளித்தார். அதில் ஒரு கட்டிடத்தினை அன்று தலைமை ஆசிரியராக கடமையாற்றிய திரு.நா.சோமசுந்தரம் அவர்கள் தனது செலவில் கட்டிக்கொடுத்தார். இதன் விளைவாக 1936 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
1936 ஆம் ஆண்டு பழைய கட்டிடத்துடனும், தளபாடங்களுடனும் இயங்கி வந்த இப்பாடசாலைக்கு திரு.சோ.சேனாதிராசா அதிபரின் காலப்பகுதியில் முதல் முறையாக தளபாடங்கள் கிடைக்கப்பெற்றன.