1925 இல் பெரியார் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் அவரது சொந்தக் காணியில் உருவாக்கப்பட்டதே இப்பாடசாலை.
இவரே இப்பாடசாலையின் ஆரம்பகால அதிபராகவும் திகழ்ந்தார்.பின்னர் சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் 1962 இல் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. 1925 இல் இருந்து 1971 வரை ஆரம்பப் பாடசாலையாக இயங்கி வந்த இப்பாடசாலை 1972 இல் பெற்றோரின் தீவிர முயற்சியினால் கனிஷ்ட மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய இப்பாடசாலையானது 1991 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தது.