எழுச்சியுறும் பேரறிவே
உன் தாளில் வீழும்
என் அழைப்பு இது
உனக்கே இது
சமர்ப்பணம்

மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்
இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்?

இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.

உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிறாய்?

உனது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலுபுதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறர்.

அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.

இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு. மு. தளையசிங்கம் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.

இது அவரின் மூன்றாவது நூல்.

முதலாவது 1965இல் வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது.’

இரண்டாவர் 1970இல் வெளியான ‘போர்ப்பறை’. ‘மெய்யுள் 1974இல் வெளியாகிறது.

இம் மூன்று நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.

மூன்றுமே மெய்யை – சத்தியத்தை – அழுத்திய நூல்கள் தான்.

ஆனால், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேறாகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.

தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுங்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின்’ கடைசிக் கதையான ‘வெளி’க்குரியதென்றால், சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு ‘போர்பறை’ நூலுக்குரித்தாகிறது.

‘மெய்யுளோ’ சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. ‘போர்ப்பறை’ விரித்த தத்துவத்தின் பிரயோகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.

இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.

குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப ‘நான்’ நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ – அசுர, தர்ம – அதர்ம, நல்ல – தீய, தொழிலாளி – முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களில் தோன்றுகின்றன.

குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவதில்லை.

அதனால் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஸலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமைவாதிகள் அறிவதில்லை.

பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.

‘மெய்யுளின்’ வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க – இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.

இதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறுகிறது.

விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

மு.த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத்மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூறுவார்.

தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்றாண்டில் பேரவதாரமான பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி.

தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம் கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966 – யுரபரளவ 15)

இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம். “உலகின் ஆன்மீக விடுதலைக்காக இந்தியா நடத்திய முதல் புரட்சி” என்றே அரவிந்தர் அதைக் குறிக்கிறார்.

காந்தியின் வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி ‘பேர்மனம்’ பற்றி விளக்குகிறார்.

வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீகக் கொள்கை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.

உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணாமம் பேர்மனம் ஆகிய அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை அரவிந்தச் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிறார்.

அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்த கோபாலகிரி என்ற பேர் அவதாரமாகும். விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.

‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும், சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப் படுத்தவும் அது தானாகவே தூண்டுகிறது.

இத்தூண்டுதலின் கiலை ஒலிப்பே பாரதி கண்ட கிருதயுகம், பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடன், அரவிந்தரோடு உறவாடியவன்.

இந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிறார்.

அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.

அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் பேர்மன் உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப்பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.

அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே மு.த. வின் ‘போர்ப்பறையும்’, ‘மெய்யுளும்’ வெளிக்காட்டப்ப படுகின்றன.

அதனால்தான் மு.த.வின் பூரண சர்வோதயக் கோட்பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்குகளோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.

மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாறாட்டம் செய்து புறூடன், போர்ப்பாச், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாறாட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் ‘உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது’ என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியாமையேயாகும்.

சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல்வாதம்.

அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.

அப்புரட்சி எழுச்சில் மட்டும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் ‘படைத்து’ விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாறாக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்ந்துவிடுகிறது.

இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சியங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.

இதன்மூலம் கதை, கட்டுரை, கவிi என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.

இந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கியமாக்கிறது.

இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே ‘கலைஞனின் தாகம்’ மெய்யுள் அமைகிறது.

இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்ச தரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.

அதனாற்றான் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங்களின் உடைப்பாகவும். அதேவேளை அவற்றின் கலப்பாகவும், அவைக்கும் அப்பாற்பட்ட மெய் – றியலிச (மெய் – சுநயடளைஅ). பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்;.

இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் ‘மெய்யுள் உள்ளும் மெய்’, ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்’ ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972இன் கடைசிக் காலங்களின் எழுதப்பட்டவையாகும். ‘மெய்யுள் உள்ளும் மெய்’ 72 ஜூன் ‘மல்லிகை’யின் வெளிவந்தது. ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 ‘சத்தியம்’ வெளிவந்தது. வர்க்கவியலும் குணவியலும், என்பது ‘கலை, தொழுகை, விடுதலை, சத்தியம்’ என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, ‘கலைஞனின் தாகத்தின்’ கடைசிப்பகுதி (அதாவது யு-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.

மு.த.வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்ல சிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வதானால் அந்த உள்ளுணர்வை “ழுஎநச ஆiனெ” என்று அழைக்கலாம்.

அதனால், நல்லசிவம் ஆத்மீக உண்மைக்கெதிரான எந்தச் சிறுமைகளையும், தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிறான்.

அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக்குள்ளே குரல் எழுப்புகிறான்.

சத்தியச் செங்காவலர் வருகிறார்.

தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள்!

உங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள்!

காலங்காலமாய் கலை இலக்கியமென்றும், கட்டுரையென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள்.

சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை.

தூக்கத்தைப் போக்கவில்லை.

கனவுகளைக் கலைக்கவில்லை.

மாறாகக் கட்டுக்களோடு இன்னொரு கட்டு

கலை இலக்கியக் கட்டு!

இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிறார்.

எழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத்துக்கெதிரான திரிபுவாதிகள்.

‘நான்’ ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்.

உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வருகிறார்.

அவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைப்படப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.

தயார்ப்படுங்கள்! தயார்ப்படுங்கள்!!

மு. பொன்னம்பலம்
புங்குடுதீவு 9 – இலங்கை.

சசி
1966ன் நடுப்பகுதியிற்தான் இப்பிறப்பில் நான் ஈஸ்வரனின் முக்கிய பக்தர்களில் ஒருவரைச் சந்தித்தேன்.

அவர் தன்னுடைய பெயரைத் தளையசிங்கம் என்று எனக்கு அறிவித்தார். அவர் சொன்ன அந்தப் புதுப்பெயரை ஞாபகத்தில் வைத்திருக்க முயன்று தோல்வியுற்றபோது இந்தப் பெயரைவிட அவரது முன் ஜன்மத்தின் பெயராலேயே தொடர்ந்து அழைப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினேன்.

சிறிது காலத்துக்குப் பின்னர், அவரது குருதேவர் பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி அவருக்கு விநாயகதாஸ் என்ற ஆச்சிரமப் பெயரை வழங்கினார். ஆனால், நானோ அவரை அவரது மகா சமாதியின் இறுதிவரை ‘சசி’ என்றே அழைத்து வந்தேன்.

யார் இந்தச் சசி?

இவர் வேறு யாருமல்ல, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெரும் பக்தராக முன்பிருந்த இராமகிருஷ்ணானந்தாவே தான். இவருக்கிருந்த அளவுகடந்த குரு பக்தியினால் குருவின் பெயரை இவருக்கு வழங்கப்பட்டது. இதைப் பற்றி விவேகாந்தரே, சசியைத் தவிர அளவு கடந்த குரு பக்தியுள்ளவர் யாருமில்லை. ஆகவே, இராமகிருஷ்ணானந்தா என்ற பெயர் இவருக்கே அதிக பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

“ஈஸ்வர கோஷ்டி” என்று சுருதிகளிற் கூறப்படும் தனியான பக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே சரி. அவதாரத்தோடு பிறப்புப் பிறப்பாகத் தொடர்ந்து வந்து அவரது மெய்விளக்கத்தை அழுத்த வரும் ஜீவன் முக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே அவர்.

முன்பு இதே சசி மகா சமாதியடைந்ததைக் கேள்வியுற்றபோது, புனித அன்னை சாரதா தேவியார் சோகந்தொனிக்கப் பின்வருமாறு கூறினார்: “என்னுடைய சசி போய்விட்டார். என்னுடைய முதுகெலும்பு முறிந்துவிட்டது.”

அவற்றை நான் இன்று மீட்டொலித்துப் பார்க்கும் அதேவேளையில், பின்வருவனவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

சசி தனது ஸ்தூவ உருவத்தை, இற்றுப்போன அணிகலன் ஒன்றை ஒதுக்கியது போல் ஒதுக்கி விட்டாலும், அவர் தொடர்ந்து ஆத்மீக உருவத்தில் வாழவே செய்கிறார். அவர் இவ்வுலகத்தில் நடமாடியபோது செய்ததைவிட அதிகப்படியான அக்கறையோடும் வேட்கையோடும் ஆத்மீக சாதகர்களையும், சமூக சேவையாளர்களையும் வழிப்படுத்துவார்.

– அன்னை
சர்வமத சங்கம்

தளைசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
-சுந்தர ராமசாமி

மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறயுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ – பதினோறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. ‘போர்ப்பறை’ – கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற்பதிப்பு 1970. ‘மெய்யுள்’ கட்டுரைகள், – சம்பாஷணைகள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளியை நோக்கி’ என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருக்ஷத்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.

தளையசிங்கம் 1935இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960ல் எழுதப்பட்டது. இரத்தினபுரியின் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வங்கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத்தக்கது. 1966ல் இவர் தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கெதண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திகான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். 1972ல் மெய்யுள், என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி மறைந்தார்.

நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்த எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதிகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.


தளையசிங்கம் தனது கலைப் பார்வையை, ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப்பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒருபகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்துகொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விஐந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வௌ;வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள், இந்த வெளிப்பாடுகளில் பிரச்சினையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானப் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மகுமா? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவைள ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளலாம். பௌத்தர்கள் கடவைள மறுப்பினும், கடவைள ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்தியை தொடரும்.

சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம். உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தவர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிலையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சினைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்படவாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிலைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்;.

மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானகத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.

முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களும் வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்லவேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு மு;னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முழுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.

இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம், கலைபோன்று பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்கவேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையாக வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப்பார்வை வேண்டும்.

Continue Reading at http://noolaham.net/project/04/369/369.htm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here