Monday, May 25, 2026

Latest Posts

மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்

திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்
சமூக சேவகர்/Group COO – LycaMobile Group)

புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை
சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம்
ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு மக்கட் செல்வங்களையும்
பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் இவர் எமது ஊரிற்காக ஆற்றிய
பணிகள் ஏராளம்.

புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் நீண்ட நாள் அனுதாபியான இவர் ஆரம்பக்
கல்வியை புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மஹா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை
Middlesex University யில் BA (Hons) Accounting & Finance பிரிவிலும் கற்று
சிறந்த கல்விமானாக திகழ்ந்தார்.

தற்போது இவர் LycaMobile Group of Companies இல் Group Chief Operating Officer ஆக
பணியாற்றுகிறார்.

இளம் வயதிலும் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பதற்கு இவரின் ஆற்றலும் தனித் திறமையுமே
காரணமாகும். இவர் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தில் பல பொறுப்புகளையும் வகித்திருந்தார்.

அதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு காற்றுவழிக் கிராமம் நிகழ்விற்கும் Lyca Mobile ஊடாகவும் தனியாகவும்
பொருளாதார உதவிகளை செய்து வந்துள்ளார். இன்றைய மண்ணின் மைந்தர்கள் விருதிற்கு இவர்
மிகவும் பொருத்தமானவரே!

இன்னும் மேலும் மேலும் இவரின் வெற்றிப பயணங்கள் தொடர வாழ்த்துகின்றோம்.

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.