புங்குடுதீவு மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம் வரலாறு

மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

இவ் ஆலயத்தின் அயலில் வாழ்ந்து வந்த அமரர் சிவஶ்ரீ சின்னதுரைக் குருக்களின் பரம்பரையினரே இங்கு நித்திய நைமித்திய பூசைகளை செய்து வந்ததாகவும், இக் கோவிலின் உரிமைக்காரர்களாக நாகமுத்து, சின்னத்தம்பி சகோதரர்களும் அவர்களது வழிவந்த நாகராசா அவர்களும் குடும்பத்தினரும் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

Exit mobile version